Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டம்புகளை உடைத்து ஆவேசம்.. ஹர்மன்ப்ரீத் கவுருக்கு அபராதம்! – நடந்தது என்ன?

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2023 (12:11 IST)
வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆவேசமாக நடந்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இந்திய – வங்கதேசம் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வந்தது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் தலா ஒரு போட்டியை வென்றிருந்த நிலையில் கடைசி போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த கடைசி போட்டியில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் விளையாடியபோது நடுவர் கொடுத்த LBW ஆல் அவர் அவுட் ஆகி வெளியேற்றப்பட்டார். அந்த ஆவேசத்தில் அவர் அங்கிருந்த ஸ்டம்புகளை பேட்டால் அடித்து விளாசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த போட்டி ட்ராவில் முடிந்ததால் இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது. அதை பெறுவதற்காக வங்கதேச அணி வீராங்கனைகள் வந்து நின்றபோது, அவர்களிடம் ஹர்மன்ப்ரீத் கவுர் “உங்கள் வெற்றிக்காக பாடுபட்டு உழைத்த நடுவர்களையும் அழைத்து வாருங்கள்” என உசுப்பேற்றும் விதமாக பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த வங்கதேச வீராங்கனைகள் அணி அங்கிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஹர்மன்ப்ரீத் கவுரிக்கு போட்டிகான ஊதிய தொகையில் இருந்து 75 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கே அணிக்கு டெல்லி கொடுத்த டார்கெட்.. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி கிடைக்குமா?

டாஸ் வென்ற டெல்லி கேப்டன். முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த டெல்லி..!

ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு நியாயம்… திலக் வர்மாவுக்கு ஒரு நியாயமா?- காட்டமாக விமர்சித்த இந்திய வீரர்!

ஈகோ பார்க்காமல் டைம் அவுட்டில் ஓடிவந்த ரோஹித் ஷர்மா… இவர்தான்யா கேப்டன் என சிலாகிக்கும் ரசிகர்கள்!

திலக் வர்மாவை வெளியே அனுப்பியது ஏன்?.. ஹர்திக் பாண்ட்யா கொடுத்த ‘அடடே’ விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments