Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய அணிக்கு எதிரான 3 -வது டி-20 போட்டி... வங்கதேச அணி ஆறுதல் வெற்றி

women cricket of india
, வியாழன், 13 ஜூலை 2023 (21:51 IST)
இந்திய அணிக்கு எதிரான3  வது டி-20 போட்டியில்  வங்கதேச அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வங்கதேசடத்திற்ல் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அதன்படி, இரு அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டியின் முதல் போட்டியில்,  இந்தியா 7 விக்கெட்  வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.

இதையடுத்து,  11 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில்,   இந்திய அணி 8 ரன்ககள் வித்தியாசத்தில் வென்று, 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

இந்த நிலையில் இன்று ( 13 ஆம் தேதி) இரு அணிகளுக்கு இடையேயான 3 வது டி20 போட்டி டாக்காவில் நடைபெற்றது.

இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி இறங்கினர். இதில், ஸ்மிருது மந்தனா 1 ரன்னுடன் வெளியேறினார்., கவுர் 40 ரன்னும், அடுத்தடுத்து வந்த வீராஙனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

எனவே 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்தது இந்திய அணி.வங்கதேச அணி சார்பில் ரபேயா கான் 3 விக்கெட் வீழ்த்தினார்.

103 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த வங்கதேச அணியில், தொடக்க ஆட்டக்காரர் ஷமிமா சுல்தானா  அணியின் வெற்றிக்கு உதவினார்.

18.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 103ரன்கள் எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது. இந்த அணியின் ஷமிமா 42 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில், மன்னு மணி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

எனவே வங்கதேச அணி ஆறுதல் வெற்றி பெற்றது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகக் கோப்பையில் தகுதி பெற்ற இலங்கை-நெதர்லாந்து: முழுமையான அட்டவணை வெளியீடு..!