கான்வேவை வெளியேற்றிய சிஎஸ்கே அணி… இதெல்லாம் ‘wrong bro’ எனக் கொந்தளிக்கும் கிரிக்கெட் ஆர்வலர்கள்!

vinoth
புதன், 9 ஏப்ரல் 2025 (08:18 IST)
இந்த சீசனில் ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வந்த சென்னை மற்றும் மும்பை அணிகள் அடுத்தடுத்து போட்டிகளில் தோற்று புள்ளிப் பட்டியலில் அதலபாதாளத்தில் உள்ளன. நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போராடித் தோல்வி அடைந்தது.

இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடர்ச்சியாக நான்காவது தோல்வியாகும். முதல் போட்டியை வெற்றிகரமாக முடித்த சிஎஸ்கே அதன் பின்னர் நான்கு தோல்விகளை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி நிர்னயித்த 220 ரன்கள் இலக்கைத் துரத்திய சி எஸ் கே அணி 201 ரன்கள் மட்டுமே தோல்வியை சந்தித்தது.

இந்த போட்டியில் சி எஸ் கே அணி இலக்கை துரத்திய போது 19 ஆவது ஓவரில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவன் கான்வே ‘ரிட்டையர்ட் ஹர்ட்’ முறையில் வெளியேறினார். அவரால் நேற்று பந்துகளை அதிரடியாக ஆடி பவுண்டரிகள் ஆடமுடியவில்லை என்பதால் அந்த முடிவை எடுத்துள்ளனர். இதே போல சில போட்டிகளுக்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணி திலக் வர்மாவை வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்படி வீரர்களை வெளியேற்றுவது கிரிக்கெட்டுக்கு அழகல்ல என ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் வேண்டாம்.. திருமண ரத்துக்கு பிறகு மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா..

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments