Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குஜராத்திடம் போராடி தோல்வி… ப்ளே ஆஃப்க்கு செல்வதில் சி எஸ் கே அணிக்கு ஏற்பட்ட சிக்கல்!

குஜராத்திடம் போராடி தோல்வி… ப்ளே ஆஃப்க்கு செல்வதில் சி எஸ் கே அணிக்கு ஏற்பட்ட சிக்கல்!

vinoth

, சனி, 11 மே 2024 (07:37 IST)
ஐபிஎல் 17 ஆவது சீசனின் லீக் போட்டிகளின் இறுதிகட்ட போட்டிகள் இப்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று நடந்த முக்கியமான போட்டியில் சி எஸ் கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த குஜராத் அணி 3 விக்கெட்களை இழந்து 231 ரன்கள் சேர்த்தது.

அந்த அணியின் ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் அபாரமாக ஆடி சதமடித்து அசத்தினர். சாய் சுதர்சன் 51 பந்துகளில் 103 ரன்களும், ஷுப்மன் கில் 55 பந்துகளில் 104 ரன்களும் சேர்த்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.

இந்த இமாலய இலக்கை துரத்தி ஆடவந்த சி எஸ் கே அணி முதல் மூன்று ஓவர்களுக்குள்ளாகவே 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த டேரில் மிட்செல் மற்றும் மொயின் அலி ஆகியோர் அரைசதம் அடித்து நம்பிக்கை அளித்தனர். ஆனால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்த வண்ணம் இருந்ததால் தேவைப்படும் ரன்ரேட் எகிறிக்கொண்டே சென்றது. இதனால் சி எஸ் கே அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 196 ரன்கள் மட்டுமே சேர்ந்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்த தோல்வியால் சி எஸ் கே அணி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பு குறைந்துள்ளது. இனிவரும் இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் சி எஸ் கே அணி வென்றால் மட்டுமே அந்த அணியால் ப்ளே ஆஃப் செல்ல முடியும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லக்னோ அணி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறாரா கே எல் ராகுல்… தீயாய் பரவிய தகவல்!