Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் சென்னை கிங்ஸ் வீரர் ஓய்வு

Webdunia
செவ்வாய், 30 மே 2023 (20:14 IST)
சென்னை அணியின் வீரர் அம்பதி ராயுடு, அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார்..

ஐபிஎல் 16வது சீசன் கிரிக்கெட் போட்டி  நேற்று குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள  நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில், குஜராத் டைட்டைன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது.

இதில், ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி   வென்றது.

இன்று மதியம் வெற்றிக் கோப்பையுடன் சிஎஸ்கே அணியினர் சென்னை வந்தடைந்தனர். இந்த நிலையில், இறுதிப் போட்டியுடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அம்பதி ராயுடு தெரிவித்திருந்தார்.

அதன்படி, இன்று தன் ஓய்வை அவர் அறிவித்துள்ளார். அதில், அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார்.

நேற்று, சென்னை அணி வெற்றி பெற்றதும், அம்பதி ராயுடுவை அணி சார்பில் கோப்பையை வாங்க வைத்து கேப்டன் தோனி அவரை கவுரவித்தார்.

இந்த நிலையில், தன் ஓய்வு பற்றி அம்பதி ராயுடு கூறியதாவது:  ''ஆறு முறை ஐபிஎல் வெற்றியாளராக என் கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்ததில் பெருமை கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

 

 

தொடர்புடைய செய்திகள்

சூப்பர்-8 சுற்றுக்கு வங்கதேசம் தகுதி...! நேபாளம் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி..!!

சூப்பர் 8 போட்டி அட்டவணை வெளியீடு! இந்தியாவுடன் மோதும் அணிகள் எவை?

ஜெய்ஸ்வால் உள்ளே வந்தால் பேட்டிங் வரிசை குழம்பிவிடும்… முன்னாள் வீரர் கருத்து!

கேப்டன்சியை ஏற்காமல் ஷாகீன் அப்ரிடிக்கு ஆதரவாக நின்றிருக்க வேண்டும்- பாபர் ஆசாம் குறித்து ஷாகித் அப்ரிடி விமர்சனம்!

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments