ஏன் ஷுப்மன் கில்லுக்கு இவ்வளவு ஆதரவு?... அதிருப்தியை வெளியிட்ட ஸ்ரீகாந்த்!

vinoth
திங்கள், 20 ஜனவரி 2025 (08:01 IST)
பிப்ரவரி 19ம் தேதி பாகிஸ்தானின் கராச்சியில் சாம்பியன்ஸ் ட்ராஃபி போட்டிகள் தொடங்கி, பாகிஸ்தான், துபாய் என இரண்டு நாடுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் ஷுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த தொடருகான துணை கேப்டனை நியமிப்பதில் ரோஹித் சர்மா, கவுதம் கம்பீர் இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கம்பீர் ஹர்திக் பாண்ட்யாவை துணைக் கேப்டனாக நியமிக்க வேண்டும் என விரும்பியதாகவும், ஆனால் அகார்கர் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் சுப்மன் கில்தான் வேண்டும் எனக் கூறி அவரை நியமித்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஷுப்மன் கில் நியமனம் குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் “ஷுப்மன் கில்லுக்கு ஏன் இவ்வளவு ஆதரவு அளிக்கிறார்கள் என்று தெரியவில்லை. அணியில் பும்ரா இருக்கும் போது அவருக்குதான் அந்த பொறுப்பை வழங்கியிருக்க வேண்டும். இதுப் பைத்தியக்காரத்தனமான முடிவாக தெரிகிறது. சஞ்சு சாம்சனை ஏன் அணியில் எடுக்கவே மாட்டேன் என்கிறார்கள் எனப் புரியவில்லை.” என அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்களுடைய அடுத்த இலக்கு 2027 ஒருநாள் உலகக்கோப்பை.. இப்போதே திட்டமிடும் காம்பீர்..!

கிரிக்கெட் விளையாட்டையே இந்தியா அழித்துவிட்டது: பொறாமையில் பொசுங்கிய சோயப் அக்தர்

கோப்பையை 2 பேருக்கு சமர்ப்பித்த காம்பீர்.. தனக்கு ஆதரவாக இருந்த ஜெய்ஷாவுக்கும் நன்றி..!

சச்சின் கொடுத்த மனவலிமை தான் வெற்றிக்கு காரணம்: சஞ்சு சாம்சன்.. 'கில்லர் காம்போ'.. தோனி வாழ்த்து..!

என் காதலியால் தான் தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கிறது: ஹர்திக் பாண்டியா பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments