நான் கோமாளி போல தோற்றமளிக்க விரும்பவில்லை… கொண்டாட்டம் குறித்து பும்ரா பதில்!

vinoth
சனி, 31 மே 2025 (10:09 IST)
கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக பும்ரா இருந்து வருகிறார். அந்தளவுக்கு சிறப்பாக விளையாடி வரும் பும்ரா பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை வெகு சிறப்பாக வழிநடத்தி வெற்றியும் பெறவைத்தார். ஆனால் அவர் அடிக்கடி காயமடைவது அவரால் தொடர்ந்து போட்டிகளில் விளையாட முடியாத சூழலை உருவாக்கியுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் கூட அவர் முதல் சில போட்டிகளில் விளையாடவில்லை. ஆனாலும் அதன் பின்னர் வந்து வெகு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நேற்று நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி பெற அவரும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தார்.

இந்நிலையில் பும்ரா விக்கெட் எடுத்த பின்னர் அதை பெரிதாகக் கொண்டாடமல் அமைதியாக இருப்பது குறித்த கேள்விக்கு “நான் வெற்றி பெறுவதற்காகவே விளையாடுகிறேன். ஆக்ரோஷமாகக் கொண்டாடுவதற்காக அல்ல. அதே நேரத்தில் நாம் எதிரணியினரையும் மதிக்க வேண்டும். எல்லையைல் கடந்து ஒரு கோமாளியைப் போலத் தோற்றமளிக்க நான் விரும்பவில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

அடுத்த கட்டுரையில்
Show comments