Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி எஸ் கே அணியில் இருந்து விலகிய டுவெய்ன் பிராவோ… ரசிகர்கள் அதிர்ச்சி!

vinoth
சனி, 28 செப்டம்பர் 2024 (07:34 IST)
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் உருவாக்கிய மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் டுவெய்ன் பிராவோ. உலகமெங்கும் டி 20 லீக் போட்டிகள் அதிகளவில் நடக்க ஆரம்பித்த போது அந்த லீக்குகளில் அதிகமாக விளையாடுபவர்களாக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஆனார்கள். அதில் ஒருவர்தான் டுவெய்ன் பிராவோ.

ஐபிஎல் தொடரில் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும், பின்னர்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் விளையாடியவர் ஆலரவுண்டர் டுவெய்ன் பிராவோ. ஆனால் வயது முதிர்ச்சி காரணமாக இந்த ஆண்டு அவர் ஓய்வு பெற்றார். ஆனால் தொடர்ந்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் குழுவில் இடம்பெற்று அந்த அணியோடு பயனித்து வருகிறார்.

அதன் பின்னர் கரிபியன் லீக் தொடரில் மட்டும் விளையாடி வந்த பிராவோ, தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்தும் விலகி, தற்போது கே கே ஆர் அணியின் ஆலோசகராக இணைந்துள்ளார். அவரின் இந்த முடிவு சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யா மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் ஆடினால் நான் ஆச்சர்யப்படுவேன்.. தினேஷ் கார்த்திக் சொல்லும் காரணம்!

கான்பூர் டெஸ்ட்: மழைக் காரண்மாக முதல்நாள் ஆட்டம் பாதியிலேயே ரத்து!

கான்பூர் டெஸ்ட் போட்டியைக் காணவந்த வங்கதேச ரசிகரைத் தாக்கிய நபர்கள்… பின்னணி என்ன?

2வது டெஸ்ட்.. டாஸ் வென்ற இந்தியா.. பேட்டிங்கில் திணறும் வங்கதேசம்..!

9 ஆண்டுகளுக்கு பிறகு டாஸ் வென்ற இந்தியா! ப்ளேயிங் லெவனில் மாற்றம் இல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments