‘பிரித்வி ஷா மாதிரி அழப் போகிறாய்’… ஜெய்ஸ்வாலை எச்சரிக்கும் முன்னாள் பாக் வீரர்!

vinoth
வியாழன், 10 ஏப்ரல் 2025 (15:03 IST)
இந்திய அணியின் இளம்  வீரரான ஜெய்ஸ்வால் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும் ஜெய்ஸ்வால் சிறந்த இன்னிங்ஸ்களை ஆடினார் .

டெஸ்ட் போட்டிகளில் அவரின் மிகச்சிறந்த ஆட்டங்களால் வர்ணனையாளர்கள் அவரை ‘நியு கிங்’ என புகழ்த் தொடங்கியுள்ளனர். அதன் மூலம் கோலிக்குப் பிறகு இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை வழிநடத்தப்போகும் புதிய பேட்ஸ்மேனாக உருவாகிவிட்டார் ஜெய்ஸ்வால் என இப்போதே கருத்துகள் எழ ஆரம்பித்துள்ளன. விரைவில் அவர் ஒரு நாள் போட்டிகளிலும் தனக்கான இடத்தை வலுப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த சீசன் ஐபிஎல் தொடரில் அவர் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை விளையாடிய ஒரே ஒரு அரைசதம் தவிர்த்து அவர் சொல்லிக் கொள்ளும்படி விளையாடவில்லை. இந்நிலையில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாஸித் அலி ஜெய்ஸ்வாலை எச்சரிக்கும் விதமாக பேசியுள்ளார். அதில் “ஜெய்ஸ்வாலின் பசி தீர்ந்து வயிறு நிறைந்துவிட்டது. இப்போது அவர் கவனம் கிரிக்கெட் மேல் இல்லை. நான் அவரிடம் வெளிப்படையாக சொல்கிறேன் ‘கிரிக்கெட் உன்னை அழவைக்கும். பிரித்வி ஷாவைப் பார். கிரிக்கெட் மீதான உனது காதலை வெளிப்படுத்து” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா சம்பளம் ரூ.2 கோடி குறைக்கப்படுகிறதா? பிசிசிஐ முடிவுக்கு என்ன காரணம்?

நடுவரை விரட்டி விரட்டி அடித்த வீரர்கள்.. கலவர பூமியான பாகிஸ்தான் மைதானம்..

கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் வேண்டாம்.. திருமண ரத்துக்கு பிறகு மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா..

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments