Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்சப் வழி டிஜிலாக்கர்: இனி ஆவணங்களை வாட்சப் மூலமே பெறலாம்... மத்திய அரசு அறிவித்தது என்ன?

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (16:35 IST)
ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பாதுகாத்து வைக்கும் டிஜிலாக்கர் வசதியை இனிமேல் வாட்சப் மூலம் பெறலாம் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. இதுவரை டிஜிலாக்கர் என்ற தனி செயலியில் பாதுகாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த ஆவணங்களை, இனி வாட்சாப் மூலம் தேவைப்படும்போது பதிவிறக்கிக் கொள்ளலாம்.

இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது,

அரசு சேவைகளை மென்மேலும் எளிமையாகவும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாகவும் மாற்ற வாட்சப் மூலம் டிஜிலாக்கர் சேவையை பெறும் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்மூலம் டிஜிலாக்கர் கணக்கை உருவாக்குவது, உள் நுழைவது, குறிப்பிட்ட ஆவணங்களை தரவிறக்குவது ஆகிய சேவைகளை வாட்சாப் மூலமே பெற முடியும்.
ஆகிய இந்த 8 டிஜிலாக்கர் ஆவணங்களை வாட்சாப் மூலம் பெறமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, கோவிட் தடுப்பூசிக்கான பதிவு, சான்றிதழ் உள்ளிட்ட கோவின் சேவைகளையும் இந்த வாட்சப் வசதி மூலமே பெற முடியும்.

சீரான நிா்வாகத்தை உறுதிசெய்யும் நோக்கில் அரசின் சேவைகள் இணையவழியில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் டிஜிலாக்கர் , வாட்சாப்பில் அரசு சேவை வசதி ஆகியவற்றின் மூலம் குடிமக்களுக்கு எளிமையான முறையில் டிஜிட்டல் சேவைகளை வழங்க வழிவகை செய்யப்படுவதாக இந்திய அரசின் பத்திரிகை தொடர்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

100 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இருக்கும் டிஜிலாக்கர் செயலியில் இதுவரை 5 பில்லியனுக்கும் அதிகமான ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தற்போது வாட்சாப் மூலம் இதை அணுகும் வசதி உருவாகியிருப்பது, குடிமக்கள் தங்கள் ஆவணங்களை அவர்களது தொலைபேசி மூலமே பெற்றுக்கொள்ளும் அளவுக்கு எளிமையாகியுள்ளது.

வாட்சாப் மூலம் டிஜிலாக்கரை பயன்படுத்துவது எப்படி?

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments