Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுக்ரேனில் ரஷ்ய ராணுவ ஜெனரல் கொல்லப்பட்டார் - யுக்ரேன் ராணுவம்

Webdunia
சனி, 12 மார்ச் 2022 (00:18 IST)
ரஷ்ய ராணுவ மேஜர் ஜெனரல் ஆண்ட்ரி கால்ஸ்னிகோஃப் கொல்லப்பட்டதாக யுக்ரேன் கூறுகிறது. 
 
ராணுவ தாக்குதலில் ரஷ்ய ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதாக யுக்ரேனிய ராணுவம் தெரிவித்துள்ளது.
 
யுக்ரேனின் உள்துறை அமைச்சக ஆலோசகர், ரஷ்ய ராணுவ மேஜர் ஜெனரல் ஆண்ட்ரி கால்ஸ்னிகோஃப் ரஷ்யாவின் கிழக்கு ராணுவ மாவட்டத்தின் 29வது படைப்பிரிவு தளபதியாக இருந்ததாக கூறுகிறார்.
 
இதை மேற்கத்திய நாடுகளின் அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். ஆனால், அந்த ஜெனரலின் பெயரை அதிகாரிகள் குறிப்பிடவில்லை.
 
இந்த விவகாரம் குறித்து ரஷ்யா தரப்பில் இருந்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
 
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பிறகு மேஜர் ஜெனரல் அந்தஸ்தில் பணியாற்றிய குறைந்தது இரண்டு ராணுவ அதிகாரிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

பாஜக ஆட்சியில் மிகப் பெரிய ஊழல்.! ஆட்சிக்கு வந்ததும் விசாரிப்போம்..! ராகுல் காந்தி..!!

சவுக்கு சங்கருக்கு காவல் நீட்டிப்பு..! போலீசார் துன்புறுத்தவில்லை என வாக்குமூலம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments