Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுக்ரேனில் ரஷ்ய ராணுவ ஜெனரல் கொல்லப்பட்டார் - யுக்ரேன் ராணுவம்

Webdunia
சனி, 12 மார்ச் 2022 (00:18 IST)
ரஷ்ய ராணுவ மேஜர் ஜெனரல் ஆண்ட்ரி கால்ஸ்னிகோஃப் கொல்லப்பட்டதாக யுக்ரேன் கூறுகிறது. 
 
ராணுவ தாக்குதலில் ரஷ்ய ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதாக யுக்ரேனிய ராணுவம் தெரிவித்துள்ளது.
 
யுக்ரேனின் உள்துறை அமைச்சக ஆலோசகர், ரஷ்ய ராணுவ மேஜர் ஜெனரல் ஆண்ட்ரி கால்ஸ்னிகோஃப் ரஷ்யாவின் கிழக்கு ராணுவ மாவட்டத்தின் 29வது படைப்பிரிவு தளபதியாக இருந்ததாக கூறுகிறார்.
 
இதை மேற்கத்திய நாடுகளின் அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். ஆனால், அந்த ஜெனரலின் பெயரை அதிகாரிகள் குறிப்பிடவில்லை.
 
இந்த விவகாரம் குறித்து ரஷ்யா தரப்பில் இருந்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
 
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பிறகு மேஜர் ஜெனரல் அந்தஸ்தில் பணியாற்றிய குறைந்தது இரண்டு ராணுவ அதிகாரிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்கள் பிரச்சினை! கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி! - புதிய நடவடிக்கையை கையில் எடுக்கும் மு.க.ஸ்டாலின்?

நித்யானந்தா உயிருடன் தான் இருக்கிறார்.. வதந்தியை நம்ப வேண்டாம்.. கைலாசா நாடு அறிவிப்பு..!

இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு.. இன்று நீலகிரியில் கடையடைப்பு போராட்டம்..!

பிரதமர் மோடி வருகை எதிரொலி: ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை..!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீடு எப்போது? முக்கிய தகவல்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments