Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கீயவை நோக்கி 5 கிமீ தூரத்திற்கு முன்னேறிய ரஷ்ய படைகள்: அமெரிக்கா

கீயவை நோக்கி 5 கிமீ தூரத்திற்கு முன்னேறிய ரஷ்ய படைகள்: அமெரிக்கா
, வெள்ளி, 11 மார்ச் 2022 (09:55 IST)
கடந்த 24 மணிநேரத்தில் யுக்ரேன் தலைநகர் கீயவை நோக்கி ரஷ்ய படைகள் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு முன்னேறி சென்றுள்ளனர் என மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


ரஷ்ய படைகளின் அணிவகுப்பு தலைநகர் கீயவ்வுக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளதை காட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்களை மக்ஸர் தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த அணிவகுப்பு, கடைசியாக ஆண்டோனோவ் விமான நிலையத்தின் வட-மேற்கு பகுதியில் காணப்பட்டது.

வடக்கே உள்ள அணிவகுப்பின் மற்ற பகுதிகள் லுபியங்காவிற்கு அருகில் தங்களை நிலைநிறுத்தியதையும், அருகில் பீரங்கிகளை நிறுத்தியுள்ளதையும் இந்த செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன என்று மக்ஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த 24 மணிநேரத்தில் ரஷ்ய படைகள் கீயவை நோக்கி 5 கி.மீ. தூரத்திற்கு முன்னேறி சென்றுள்ளனர் என, மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரண்டு நாள் சரிவுக்கு பின் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!