நேபாளத்தில் காணாமல் போன விமானம் சிதைந்த நிலையில் கண்டெடுப்பு

Webdunia
திங்கள், 30 மே 2022 (11:01 IST)
நேபாளத்தில் நேற்று காணாமல் போன தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இரட்டை எஞ்சின் விமானம் சிதைந்த நிலையில் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று நேபாள நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.


இந்த விமானத்தில் மொத்தம் 22 பேர் பயணித்தனர். இதுவரை 14 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்று நேபாள ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தேவ் சந்திர லால் கர்ணா பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.


நேபாளத்தில் உள்ள மஸ்டாங் மாவட்டத்தில் சுமார் 14500 அடி உயர இமயமலைப் பகுதியில் இந்த விமானம் நேற்று விழுந்து நொறுங்கியது. விமானம் விழுந்து நொறுங்கிய இடத்திற்கு மீட்பு ஹெலிகாப்டர்கள் சென்று அடைந்துள்ளதாகவும் அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் நேபாள அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மணிக்கு மேல ஆட்டோ ஓடாது!.. சென்னை பிரச்சாரத்தை ரத்து செய்த விஜய்...

ரஜினி தலைவர்.. விஜய் நம்ம வீட்டுப் பிள்ளை! - ரவி மரியா ஓபன் டாக்!

டிரம்பை கண்டித்த இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி.. கிண்டலாக மீம்ஸ் போட்ட ஈரான்..

படுத்து கொண்டே பயணம் செய்யலாம்.. ரயில் போல் விமானங்களில் பெர்த் வசதி.. கட்டணம் ரூ.1.30 லட்சம்

தற்கொலைக்கு தூண்டிய ஜெமினி AI.. சாட்பாட் பேச்சை கேட்டு வாலிபர் விபரீத முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments