Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைபர் ஸ்டாகிங்: செல்ஃபியால் ஜப்பான் பாடகிக்கு நேர்ந்த துயரம் - இப்படியும் வருகிறது ஆபத்து

Webdunia
வெள்ளி, 11 அக்டோபர் 2019 (20:52 IST)
ஜப்பானில் பாப் பாடகி ஒருவர் பதிவிட்ட புகைப்படம் மூலம் அவரை தொடர்ந்து சென்று பாலியல் தாக்குதல் தொடுத்தாக குற்றம் சுமத்தப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.
அந்த பாடகி இணையத்தில் பதிவிட்ட செல்ஃபி புகைப்படத்தின் ஊடாக அவரின் கண்ணில் தெரிந்த ரயில் நிலையத்தில் அடையாளம் கண்டு கொண்டதாக அந்த குற்றம் சாட்டப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.
 
ஜப்பானில் இந்த வழக்கு சைபர் பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்புயிள்ளது.
 
குற்றம் சாட்டப்பட்ட ஹிபிகி சாட்டோ என்னும் அந்த நபர், கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி அந்த ரயில் நிலையத்தில் காத்திருந்து அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.
 
அதன்பின் கைது செய்யப்பட்ட அந்நபர், உள்ளூர் ஊடகத்தில் புகழ்பெற்ற அந்த பெண்ணின் ரசிகன் என்று தெரிவித்துள்ளார்.
 
அந்த பெண்ணின் புகைப்படத்தில் தெரிந்த ரயில் நிலையத்தை அந்நபர் கூகுள் ஸ்டீரிட் வியூ மூலம் கண்டுபிடித்துள்ளார்.
 
மேலும் அந்த பெண் பதிவிட்ட வீடியோக்களில் மூலம் அந்த பெண்ணின் வீட்டில் உள்ள திரை மற்றும் வெளிச்சம் வரும் திசை ஆகியவற்றையும் அந்த நபர் கவனித்துள்ளார்.
 
இந்த நிகழ்வு, சமூக வலைதளங்களில் தங்கள் புகைப்படங்களை பதிவிடுவது குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
 
நமது புகைப்படத்தில் உள்ள சிறிய தொரு விஷயம்கூட நமது இருப்பிட்த்தை தெளிவாக சொல்லிவிடும். மேலும் அதிக ரிசெல்யூஷன் கொண்ட புகைப்படங்களை பதியும்போது அதன்மூலம் தொழில்நுட்ப வசதியோடு உங்கள் இருப்பிடத்தை அறிந்து கொள்ளக் கூடும் என இணைய ஆய்வுநுட்பங்கள் குறித்தான வலைதளமான பெல்லிங்கேட்டின் நிறுவனர் எலியட் ஹிக்கின்ஸ் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
 
"எனவே யாருக்கும் தெரியவேண்டாம் என்று நீங்கள் நினைக்கும் விஷயங்கள் குறித்து இணையத்தில் பதிவிடாதீர்கள்; தனிப்பட்ட இணைய சேவைகள்கூட சில நேரத்தில் ஆபத்தில் முடியலாம்." என்கிறார் எலியட்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்