Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

42 ஆயிரத்தை தாண்டிய உயிர்பலி – சீனாவை பின்னுக்கு தள்ளிய நாடுகள்!

Advertiesment
World
உலகளவில் நாளுக்குநாள் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளது.

உலகம் முழுவதும் 180 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒருநாளில் மட்டும் உலகம் முழுவதும் 4 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

காலை நிலவரப்படி இத்தாலியில் இறப்பு எண்ணிக்கை 12,428 ஆக உள்ளது. 1.05.,792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் 8,464 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 95 ஆயிரமாக உள்ளது. அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், 3883 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் 3,523 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆசிய நாடுகளை காட்டிலும் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சொகுசாக ஹோட்டலில் தனிமைப் படுத்திக் கொண்ட தாய்லாந்து மன்னர் !