Webdunia - Bharat's app for daily news and videos

Install App

85 நாடுகளை உலுக்கும் டெல்டா வகை கொரோனா! – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 25 ஜூன் 2021 (13:18 IST)
இந்தியா உள்ளிட்ட 85 நாடுகளில் டெல்டா வகை கொரோனா உள்ள நிலையில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக கொரோனா பரவல் இருந்து வரும் நிலையில் பல கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து மேலும் சில நாடுகளில் கொரோனா திரிபடைந்த நிலையில் அவற்றிற்கு ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என பெயரிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்தியாவில் திரிபடைந்த டெல்டா வகை கொரோனா தற்போது உலகம் முழுவதும் 85 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2 வாரத்தில் 11 நாடுகளில் டெல்டா வகை கொரோனா உறுதியாகியுள்ளது. இந்நிலையில் ஆல்பா வகை வைரஸை விட வரும் காலங்களில் டெல்டா வகை பெரும் தொற்றாக மாறலாம் என கூறப்படுகிறது.

எனவே டெல்டா வகை வரைஸ் பரவலை தடுக்க உலக நாடுகளும், மக்களும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments