Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனோவை கவனிக்க தவறிவிட்டோம் – உலக சுகாதார அமைப்பு மன்னிப்பு!

Webdunia
செவ்வாய், 28 ஜனவரி 2020 (16:46 IST)
உலகையே அச்சுறுத்தும் பெரும் வைரஸாக கொரோனா வளர்ந்து வரும் நிலையில் அதை முறையாக கணிக்க தவறிவிட்டதாக உலக சுகாதார அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது.

சீனாவின் வுகான் மாகாணத்தை மையமாக கொண்டு பரவ தொடங்கிய இந்த வைரஸ் கடந்த சில வாரங்களுக்குள் மிகவும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில் நாளுக்கு 4 முதல் 8 வரை இருந்த இறப்பு எண்ணிக்கை தற்போது 40 முதல் 50 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர உலகம் முழுவதும் மொத்தம் 17 நாடுகளில் கரோனா வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பரவலை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுப்பது என தெரியாமல் உலக நாடுகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளன. கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சமயத்தில் இது மிதமான நிலையிலேயே உள்ளது என அறிவிப்பு வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு தற்போது வைரஸின் வீரியத்தை கவனிக்க தவறிவிட்டதாக தவறை ஒப்புக்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments