Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாக்கத்தியை வைத்து கேக் வெட்டிய புது மாப்பிள்ளை; கைது செய்த போலீஸார்

Arun Prasath
செவ்வாய், 28 ஜனவரி 2020 (16:37 IST)
திருமணத்தில் பட்டாக்கத்தியை வைத்து கேக் வெட்டிய மாப்பிள்ளையை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை திருவேற்காடு பகுதியில் புவனேஷ் என்பவருக்கு திருமணம் நடைபெற்றது. அவர் பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் ரூட் தல என அறியப்படுகிறார். ஆதலால் இத்திருமணத்தில் பச்சையப்பன் கல்லூரியில் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் இத்திருமணத்தை கொண்டாட விழாவிற்கு வந்த மாணவர்கள் 3 அடி பட்டாக்கத்தியை வைத்து கேக் வெட்டினர். மேலும் ஒரு மாணவன் பட்டக்கத்தியோடு நடனம் ஆடினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் திருவேற்காடு போலீஸார், மாமியார் வீட்டிற்கு விருந்திற்காக சென்றிருந்த புதுமாப்பிள்ளை புவனேஷை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments