சாலையில் அழுத சிறுமியின் படத்துக்கு ' உலக விருது’ ! என்ன ஆச்சர்யம் ?

Webdunia
வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (19:02 IST)
அமெரிக்காவில் உள்ள புகைப்படக்கலைஞர்களின் ஆகச்சிறந்த ஆசை என்னவென்றால் உலக பத்திரிக்கை புகைப்பட விருதினைப் பெறுவதுதான்.
இந்நிலையில் அமெரிக்க - மெக்ஸிகோ எல்லையில்  ஒரு சிறுமி அழுது கொண்டிருக்கிற புகைப்படமானது உலக பத்திரிக்கை புகைப்பட விருது பெற்றுள்ளது.
 
அதாவது, கடந்த வருடம் ஜுன் மாதம் 12 ஆம்தேதி,மெக்ஸிகோ அமெரிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாக அமெரிக்க எல்லைப் பாதுகாப்புபடை வீரர்கள்  சிலரைக் கைது செய்யப்பட்டனர்.
 
எனவே கைதான ஒரு பெண் தன் மகளை அங்கேயே விட்டுவிட்டு அமெரிக்க எல்லைப் பாதுகாப்புபடை வீரர்கள் வாகனத்தில் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
 
அதன் பின்னர் அக்குழந்தை இரவு நெடுநேரம் அதே இடத்தில் நின்று கொண்டு அழுதது. இக்காட்சியை அந்நாட்டு புகைப்பட கலைஞர் ஜான் தன் கேமராவில் படமாக்கினார்.
 
உலகெங்கிலுமிருந்து சுமார் 4738 கலைஞர்கள் தாங்கள் எடுத்திருந்த 78.801 போட்டோக்களை உலக பத்திரிக்கை புகைப்பட விருதுக்கு அனுப்பி வைத்தனர்.
 
இதில் ஜான் எடுத்த சிறுமி யனீலா அழுவது போன்றுள்ள இப்புகைப்படம் உலக பத்திரிக்கை புகைப்பட விருதை வென்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழனிச்சாமி எனக்கு தலைவர் இல்ல!.. பதில் சொல்ல அவசியம் இல்ல!.. செங்கோட்டையன் அதிரடி!...

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கல்பாக்கம் அருகே கரை கடக்குமா? சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை!

இன்று தங்கம் விலை சரிந்தாலும் ரூ.96000க்கும் மேல் ஒரு சவரன்.. இன்னும் இறங்குமா?

நேற்று காலையில் உயர்ந்து பிற்பகலில் சரிந்த பங்குச்சந்தை.. இன்று காலையிலேயே சரிவு..!

சென்னையில் கன மழையை எதிர்த்து மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments