Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புகைப்படத்தில் முகம் தெரிந்ததால் பெண் கைது

புகைப்படத்தில் முகம் தெரிந்ததால் பெண் கைது
, செவ்வாய், 13 டிசம்பர் 2016 (17:32 IST)
சவுதி அரேபியாவில் புர்கா அணியாமல் முகம் தெரியும்படி புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.


 

 
கடந்த மாதம் சவுதி அரேபியா ரியாத்தில் உள்ள ஒரு தெருவில் முகத்திரை அணியாமல் எடுத்த புகைப்படத்தை பெண் ஒருவர் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் அந்த பெண்ணை காவல்துறையினர் பொது ஒழுக்க மீறல்கள் அடிப்படையில் கைது செய்தனர்.
 
அந்த பெண்ணின் பெயரை காவல்துறையினர் வெளியிடவில்லை. சவிதியில் பெண்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது தலை முதல் கால்வரை மறைக்கக்கூடிய புர்கா என்ற உடையை அணிய வேண்டும் என்பது அந்நாட்டு சட்டம்.
 
இதனை மீறுபவர்கள் சட்டபடி கடுமையாக தண்டிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட பெண் மாலாக் அல்-செக்ரி என பல்வேறு இணையதளங்கள் செய்தி வெளியிட்டு உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலா கிரிமினல் என்பது மக்களுக்கு தெரியும்: சொல்வது ஜெயலலிதாவின் சொந்தம்!