Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சசிகலா கிரிமினல் என்பது மக்களுக்கு தெரியும்: சொல்வது ஜெயலலிதாவின் சொந்தம்!

சசிகலா கிரிமினல் என்பது மக்களுக்கு தெரியும்: சொல்வது ஜெயலலிதாவின் சொந்தம்!

சசிகலா கிரிமினல் என்பது மக்களுக்கு தெரியும்: சொல்வது ஜெயலலிதாவின் சொந்தம்!
, செவ்வாய், 13 டிசம்பர் 2016 (17:31 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து அவர் வகித்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவியை யார் வகிக்க போகிறார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் தலைமை பதவியான இதற்கு சசிகலா வர வேண்டும் என அதிமுக மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தொண்டர்கள் இதனை ஏற்கவில்லை எனவே தகவல்கள் வருகின்றன.


 
 
இந்நிலையில் சசிகலா ஜெயலலிதாவை கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் அவரை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, அவர் எப்படிப்பட்ட கிரிமினல் என்பது மக்களுக்கு தெரியும் என ஜெயலலிதாவின் சகோதரியின் மகள் அம்ருதா கூறியுள்ளார்.
 
தமிழக மக்கள் ஜெயலலிதாவை மட்டுமே ஏற்றுக்கொண்டு மதிப்பளிக்கின்றனர் சசிகலாவை அல்ல என கூறிய அம்ருதா, எனக்கு, ஜெயலலிதா அம்மாவின் சொத்தில் ஒரு பைசா கூட தேவையில்லை. அரசியலுக்கு வரும் எண்ணமும் எனக்கு இல்லை.
 
அவர் தமிழக மக்களுக்காக வாழ்ந்தவர், சேவை செய்தவர். அவரது சொத்துகளை அரசு எடுத்து கொண்டு மக்களுக்கு நல்ல திட்டங்களுக்கு அதனை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவை தன் பிடியில் வைத்திருந்தார் சசிகலா: அம்ருதா பரபரப்பு குற்றச்சாட்டு!