Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரில் செல்லும்போது கண் மை போட்ட பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்

Webdunia
திங்கள், 18 ஜூன் 2018 (12:11 IST)
கருப்பு பென்சிலால் கண் மை போட்டு கொண்டிருந்த இளம்பெண் ஒருவருக்கு எதிர்பாராத வகையில் பென்சில் கண்ணுக்குள் சென்றுவிட்ட விபரீத சம்பவம் பாங்காங்கில் நடைபெற்றுள்ளது.
 
பாங்காங் நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது தோழியை சந்திக்க காரில் சென்று கொண்டிருந்தார். காரை அவரது டிரைவர் ஓட்டிக்கொண்டிருந்தபோது காரின் பின்சீட்டில் இருந்த அந்த இளம்பெண் தனது கண்புருவத்தையும் கண்ணையும் அழகுபடுத்த கருப்பு பென்சிலால் மையிட்டு கொண்டிருந்தார்.
 
அப்போது எதிர்பாராத வகையில் அவர் சென்று கொண்டிருந்த கார் முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்றின்மீது திடீரென மோதியது. இதனால் பென்சிலால் கண் மை போட்டுக்கொண்டிருந்த பெண்ணின் இடது கண்ணுக்குள் அந்த பென்சில் சொருகி கொண்டது.
 
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது டிரைவர் உடனடியாக அந்த பெண்ணை வேறொரு காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மருத்துவர்கள் துரிதமாக செயல்பட்டு அவருடைய கண்ணில் இருந்து அந்த பென்சிலை லாவகமாக எடுத்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் அந்த பெண்ணின் கண் பார்வைக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை..! கடன் பிரச்சினையால் விபரீத முடிவு.!!

கனமழையால் தமிழகத்தில் 4,385 ஹெக்டேர் பயிர்கள் சேதம்.!

குற்றால அருவிகளில் குளிக்கலாம்.. மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments