Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ப்ரிபெய்டு மயமாக மாறும் இந்தியா! நன்மையா, தீமையா?

ப்ரிபெய்டு மயமாக மாறும் இந்தியா! நன்மையா, தீமையா?
, வெள்ளி, 15 ஜூன் 2018 (20:56 IST)
இந்தியாவில் இன்னும் மூன்று வருடங்களில் எல்லாமே ப்ரிபெய்டு மயமாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
தற்போது செல்போனில் மட்டுமே ப்ரிபெய்டு உள்ளது. இனிமேல் பெட்ரோல் பங்க், மின்சார கட்டணம், டோல்கேட் கட்டணம் என முக்கிய செலவினங்கள் அனைத்துமே இன்னும் மூன்று வருடங்களில் ப்ரிபெய்டு மயமாகிவிடுமாம்
 
காரில் பொருத்தப்படும் சிப்பில் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்து பேலன்ஸ் வைத்து கொள்ள வேண்டும் என்றும் இந்த பேலன்ஸில் இருந்து டோல்கேட் மற்றும் பெட்ரோல் போடும்போது தானாகவே பணம் கழிந்து கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.
 
அதேபோல் மின்சார பெட்டியிலும் சிப் வைத்து கொண்டு அதனை ரீசார்ஜ் செய்து மின்சாரத்தை பயன்படுத்த வேண்டுமாம். தொகை குறைய குறைய மீண்டும் ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டுமாம். இனி மாதமிருமுறையோ அல்லது ஒவ்வொரு மாதமும் மின்சார கட்டணம் செலுத்த தேவையில்லை
 
webdunia
இந்த முறையால் இனிமேல் பொதுமக்கள் முன்கூட்டியே தங்கள் தேவைக்கு பணத்தை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் அதே நேரத்தில் காரில் குறைவான பெட்ரோல் போட்டுவிட்டு அதிகமாக பணம் வசூலிக்க முடியாது. எவ்வளவு பெட்ரோல் போடப்பட்டதோ, அதற்கான தொகை மட்டுமே கழியும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேரறிவாளனை கருணைக்கொலை செய்யுங்கள்: அற்புதம்மாள் உருக்கமான வேண்டுகோள்