Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்பெயின் நாட்டில் காட்டுத் தீயால் பரபரப்பு

Webdunia
திங்கள், 22 மே 2023 (15:32 IST)
ஸ்பெயின்  நாட்டின்  தென்மேற்குப் பகுதியில் உள்ள எக்ஸ்ட்ரீமதுராவில் உள்ள வனப்பகுதியில் திடீரென்று  தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயின்  நாட்டில் பெட்ரோ சான்செஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த நாட்டின் தென்மேற்குப் பகுதியில் உள்ள எக்ஸ்ட்ரீமதுராவில் உள்ள வனப்பகுதியில் திடீர் தீப்பிடித்தது. அங்கு வீசிய காற்று மற்றும் வறண்ட தட்பவெப்பத்தால், தீ காட்டின் மற்ற பகுதிகளுக்குப் பரவியது.

இதனால், அந்த வனப்பகுதிகளைச் சுற்றிலும் இருந்த கடல்சோ, டெஸ்கார்கமரியா உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அப்பகுதியில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் காட்டுத் தீயால் 8 ஆயிரத்து 500 ஹெக்டேர் காடுகள் எரிந்து நாசமடைந்துள்ளதாகவும், தீயணைப்புத்துறையினர் பல்வேறு முயற்சிகள் எடுத்து தீயை அணைத்து வருவதாகவும் தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும்.. உள்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்..!

பள்ளிகளில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும்..! தமிழக அரசுக்கு நீதிபதி சந்துரு பரிந்துரை.!!

சென்னை பெசன்ட் நகர் கார் விபத்து: ஆந்திர எம்.பி., மகள் கைது

பெண்ணின் உயிரைப் பறித்த ரீல்ஸ் மோகம்.! 300 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்..!!

முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள்..! பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments