அடுத்த ரவுண்டுக்கு எல்லாரும் ரெடியா? – உலக சுகாதர அமைப்பு பகீர் எச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (10:50 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பல லட்சம் மக்கள் இறந்துள்ள நிலையில் அடுத்த பெருந்தொற்றுக்கு தயாராக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த டிசம்பரில் பரவ தொடங்கிய கொரோனா பெருந்தொற்று இதுவரை பல லட்சம் மக்களை பலி கொண்டுள்ளது. பல கோடி மக்கள் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மருந்து கண்டுபிடிக்க பல நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா குணமானவர்களுக்கு மீண்டும் கொரோனா ஏற்படுவது மேலும் அதிர்ச்சியை அளித்து வருகிறது.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள புதிய எச்சரிக்கை உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கொரோனாவால் மக்களின் அன்றாட வாழ்வு பெரிது பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கொரோனா முடிவு அல்ல, அடுத்ததாக வரவிருக்கும் பெரும் தொற்றை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

கொரோனாவிற்கே சரியான மருந்து இன்னும் கண்டுபிடிக்காத சூழலில் புதிய தொற்றை எப்படி எதிர்கொள்வது என பல நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments