Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு WHO எச்சரிக்கை !

Advertiesment
WHO warns
, வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (23:30 IST)
கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு மீண்டும் உடல்நலக்குறைபாடு ஏற்படும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

கடந்த ஆண்டு சீனாவில் முதன் முதலில் கொரொனா தொற்று உருவாகி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவியது.

இத்தொற்றின் முதல் அலை முடிந்த நிலையில்  தற்போது இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வருகிறது. சமீப நாட்களாக குறைவது போலிருந்து தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.
.
விரைவில் கொரொனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளது என அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில மாநிலங்களில் ஊரடங்கில் சில தளர்வுகள்  அறிவிக்கப்பட்டு அனைத்துத் தொழில்துறைகளும் கொரோனா வழிமுறைகளைப்பின்பற்றி செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.  அதில், கொரொனா தொற்றால் நீண்ட நாள் பாதிக்கப்பட்டவ்ர்கள் அதிலிருந்து குணமடைந்த பின் மீண்டும் உடல் நலப் பாதிப்புகள் ஏற்படும் எனவும்,  இப்பிரச்சனை அவர்களுக்கு எத்தனை நாட்கள் நீளும் எனக் கூற முடியாது எனவும், அவ்வாறு பாதிக்கப்பட்டால் அவர்கள் மருத்துவ உதவி பெற்றுக்கொள்ள வேண்டுமென எச்சரிக்கை விடுத்துள்ளது.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவைத்தலைவர் மதுசூதனன் மறைவுக்கு சசிகலா இரங்கல்