Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
, புதன், 16 மார்ச் 2022 (17:12 IST)
உலக நாடுகளில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது 
 
கடந்த 2000 ஆண்டு முதல் இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக லட்சக்கணக்கானோர் பலியாகினர் என்பதும் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.
 
இந்த நிலையில் அனைத்து நாடுகளிலும் கொரோனா பரவல் குறைந்து தற்போது தான் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்
 
இந்த நிலையில் சீனா உள்பட ஒருசில நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது என்றும், கடந்த வாரத்தை விட இந்த வாரம் கொரோனா வேகம் எடுத்துள்ளது என்றும் எச்சரிக்கை செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சாலை விபத்துக்கள் அதிகம்: மத்திய அமைச்சர்