Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோர்பேவாக்ஸ் - தடுப்பூசியின் சிறப்பம்சங்கள் என்ன?

கோர்பேவாக்ஸ் - தடுப்பூசியின் சிறப்பம்சங்கள் என்ன?
, புதன், 16 மார்ச் 2022 (10:24 IST)
12-14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு  அறிவித்துள்ளது. 

 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்கனவே பெரியோர்களுக்கு தடுப்பூசி போடும் பணி கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தியாவில் 12-14 வயதுடைய சிறுவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. 
 
12-14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு  அறிவித்துள்ளது. இந்தியாவில் இரண்டு டோஸ் தடுப்பூசியின் விலை ரூ.400. இந்த தடுப்பூசியின் சிறப்பம்சங்கள் குறித்த விவரம் பின்வருமாறு... 
 
1. கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புரத அடிப்படையிலான முதல் தடுப்பூசி ஆகும். 
 
2.  கோவிஷீல்டு தடுப்பூசியை விட கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி கூடுதல் எதிர்ப்பு சக்தி கொண்டது என ஆய்வில் தகவல். 
 
3. கோர்பவாக்ஸ் தடுப்பூசி, கொரோனா வைரசின் ஸ்பைக் புரோட்டீனை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 
 
4. பயனாளிகள் 28 நாட்கள் இடைவெளியில், 2 டோஸ் கோர்பவாக்ஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். 
 
5. கொரோனா வைரசுக்கு எதிராக 90 சதவீதமும், டெல்டா வகை வைரசுக்கு எதிராக 80 சதவீதமும் செயலாற்றக் கூடியது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பகவந்த் மானுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து !