Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவை எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராகவில்லை! – உலக சுகாதார அமைப்பு!

Webdunia
சனி, 29 பிப்ரவரி 2020 (13:42 IST)
உலக நாடுகள் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை எதிர்கொள்ள இன்னமும் உலக நாடுகள் தயாராகவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் ஆசியாவை தாண்டி உலகெங்கும் வீரியத்தோடு பரவத்தொடங்கியுள்ளது. சீனாவில் கொரோனாவால் 2800க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து தென் கொரியாவிலும், ஜப்பானிலும் கொரோனா வேகமாக பரவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆசிய நாடுகளை மட்டுமின்றி ஐரோப்பிய, வளைகுடா நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் தெரிய தொடங்கியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. வளைகுடாவில் ஈரானில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

துருவப் பகுதியை ஒட்டியுள்ள நாடுகளான எஸ்தோனியா, டென்மார்க் மற்றும் சைபீரியா உள்ளிட்ட நாடுகளும் கொரோனா அறிகுறிகளை கண்டுள்ளதாக அறிவித்துள்ளன.

இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சிகரமான செய்தி ஒன்றை அளித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் அதை எதிர்கொள்ள மருத்துவ வசதிகள் எந்த நாட்டிலும் இல்லை என தெரிவித்துள்ளது. மிகவும் வளர்ந்த நாடுகளிலேயே கொரோனாவை கட்டுப்படுத்தவோ, மக்களை பாதுகாக்கவோ சரியான வசதிகள் இல்லை என கூறப்படுகிறது.

வயது முதிர்ந்தவர்களையே இந்த வைரஸ் உடனடியாக தாக்குவதால் அவர்களை முன்னெச்சரிக்கையோடு இருக்க சொல்லி உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments