Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாயால் கெட்ட ரஜினி? திரும்ப பெறப்படும் போலீஸ் பாதுகாப்பு!!

Webdunia
சனி, 29 பிப்ரவரி 2020 (13:22 IST)
ரஜினிக்கும் அவரது வீட்டிற்கும் வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்பபெறப்பட உள்ளதாக தெரிகிறது. 
 
துக்ளக் விழாவில் ரஜினி பேசிய சில கருத்துக்கள் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. எனவே அவருக்கும் அவரது போயஸ் கார்டன் இல்லத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பாதுகாப்பு குறித்து காவல்துறை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளார்.
 
இந்த ஆலோசனையின் போது ரஜினி தனக்கும் தனது வீட்டிற்கும் வழங்கப்பட்ட பாதுகாப்பை திரும்பபெற்றுக்கொள்ளும் படி கேட்டுள்ளார். இது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சமீபத்தில் பாஜகவுக்கு எதிராக வேறு ரஜினி பேசி இருக்கும் நிலையில் அவரது போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்படுகிறது என கூறப்படுவது உண்மையல்ல ரஜினியே பாதுகாப்பு வேண்டாம் என கூறியுள்ளதாக தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments