Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளை மாளிகையில் துப்பாக்கி சூடு; பேட்டியிலிருந்து வெளியேறிய ட்ரம்ப்!

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (08:15 IST)
அமெரிக்க வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்து வந்த போது திடீர் துப்பாக்கி சூடு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டிருந்தபோது வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கியுடன் மர்ம நபர் சுற்றி திரிவதை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர். அவர் தப்பிக்க முயன்றபோது பாதுகாப்பு படையினர் சுட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது.

இதனால் பத்திரிக்கையாளர் சந்திப்பிலிருந்து அதிபர் ட்ரம்ப் வெளியேற்றப்பட்டார். பிறகு பதற்றம் தணிந்ததும் பத்திரிக்கையாளர்களுக்கு பேசிய அதிபர் ட்ரம்ப் பாதுகாப்பு படையினரால் சுடப்பட்ட நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments