Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 பொருட்களுக்கு கூடுதல் சுங்கவரி: சீனாவிற்கு எதிராக இந்தியாவின் அதிரடி நடவடிக்கை

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (07:57 IST)
லடாக் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் தரப்பில் மிக அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது
 
இந்த சம்பவத்திற்குப் பின்னர் சீனாவுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்தது. குறிப்பாக சீனாவில் நூற்றுக்கணக்கான செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது, இந்திய ரயில்வேயில் சீன நிறுவனங்கள் பெற்ற ஒப்பந்தங்களை ரத்து செய்தது, சீனப் பொருட்களை இறக்குமதி செய்ய பல்வேறு கெடுபிடிகள் செய்தது,
 
இந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட நடவடிக்கையாக சீனாவின் 20 பொருட்களுக்கு கூடுதல் சுங்க வரியை மத்திய அரசு அறிவிக்க இருப்பதாக வெளிவ்நதுள்ள செய்தி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கேமரா, லேப்டாப், ஜவுளி உள்ளிட்ட 20 பொருட்களுக்கு இந்த வரியை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன/ சீனாவிலிருந்து இறக்குமதியை கட்டுப்படுத்த மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments