Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா வைரஸ் : சீனாவில் உண்மையான நிலவரம் என்ன ? ’வெப்துனியா’வின் பிரத்யேக தகவல் !

கொரோனா வைரஸ் : சீனாவில் உண்மையான நிலவரம் என்ன ? ’வெப்துனியா’வின் பிரத்யேக  தகவல் !
, வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (15:41 IST)
கொரோனா வைரஸ் : சீனாவில் உண்மையான நிலவரம் என்ன ? வெப்துனியாவின் பிரத்யேக தகவல்

உலகத்தையே பெரும் அச்சத்திற்குள்ளாகியுள்ள கொரோனா வைரஸ் குறித்த சிறப்பான செய்தியை சீன தேசத்தின் மிகபெரிய நகரமான சாங்காயில் இருந்து தருகிறோம். 
 
சங்காய்.
 
பெரும் அழிவுக்குள்ளாக்கியுள்ள கொரோனோ வைரஸ் சீனாவில் இருந்து அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு  பரவியுள்ளது. என்றாலும் சீனா முழுக்க இந்த வைரஸின் தாக்கம் பாதித்துள்ளது.குறிப்பாக அங்குள்ள வூகானில் உள்ள ஹூபெயில் தான் இதன் தாக்கம் அதிகம் உள்ளது. உலக சுகாரா அமைப்பில் (WHO ) இது தீவிரவாதத்தை விட பயங்கரமானது என தெரிவித்துள்ளது. இதற்கிடையில், சாங்காயில் இருந்து பெற்ற தகவல்படி அங்கு நிலவுகின்ற சூழ்நிலை கட்டுப்பாட்டில் உள்ளதாக  கூறுகிறது.
 
அங்கு நிலவுகின்ற சூழல் குறித்து எந்த கருத்துகளை வெளியிட மீடியாக்களுக்கு கடுமையாக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தகவலை வெளியிட்டவர் தனது பெயரை வெளியிட மறுத்துவிட்டார் எனபது குறிப்பிடத்தக்கது.
 
போதுமான மருத்துவ குழுக்கள் வூஹான் மாகாணத்திற்கு அனுப்பு வைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கடுமையாக உழைத்து  வருகின்றனர். சுமார் 10 ஆயிரம் மருத்துவர்கள் உள்ளனர். அதனால் தற்போது , அங்கு ஓரளவு வைரஸை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 
 
இரவு பகல் பாராமல் இந்த மக்கள் கடுமையாக உழைத்து வைரஸை கட்டுக்குள் வைக்கப் பாடுபட்டு வருகின்றனர்.இதனால் 6000 பேர்ட்  கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். பிப்ரவரி 6 முதல் தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ஆண்டி வைரஸ் மருத்துகள் கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
 
தற்போது வரை இந்தக் கொரோனோ வைரஸால் உலகம் முழுஇவதும் சுமார் 13168 பேர் இறந்துள்ளனர்.  இதில், ஹூபேய் மாகாணத்தில் மட்டும் 1310 பேர் ஆகும். ஆகமொத்தம் சீனாவிலலும், வூஹான் ஹூபேயில்  இறந்தவர்களிம்ன் எண்ணிக்கை 1036 ஆகும்.
 
வியாழன் அன்று இரவு 8 மணி அளவில் 59 ஆயிரத்து 902 மக்கள் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருந்த போதிலும் 6143 பேர் இந்த கொரோனா வைரஸில் இருந்து குணமாகிவருகின்றனர்.
 
இன்னும் 13 ஆயிரத்து 435 பேர் சந்தேகிக்கும்படி உள்ளனர். ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸில் தலா ஒருவர் இறந்துள்ளனர்.  மூன்று இந்தியர்களுக்கும் கொரோனோ அறிகுறிகள் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
 
சீனாவுக்கு பிறகு, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளாக சிங்கப்பூரில் (50), தாய்லாந்து (33),  சவூத் கொரியா (28). மலேசியா (19), ஜெர்மனி (16), ஆஸ்திரேலியா (15), வியட்நாம் ( 16) அமெரிக்கா (14)  பிரான்ஸ் (11),  பிரிட்டன் (9), ஐக்கிய அரேபிய நாடுகள் (8), ஆகிய நாடுகளிலும் மற்றும் கனடா, இத்தாலி, ரஷ்யா ஸ்பெயினிலும் இந்த நோய் பரவியுள்ளது.
 
சீனா கொரோனா வைரஸ் குறித்த உண்மைத் தகவலை மறைப்பதாக தெரிகிறது. இப்பினும் செயற்கைக்கோள் புகைப்படத்தின்படி சல்பைர் டை ஆக்ஸைடு (So2)அதிக அளவில் வூஹான் மாகாணத்தின் வான் எல்லையில் இருப்பதாக தெரிகிறது. அதேசமயம் 14 ஆயிரம் மனிதர் உடல்கள் எரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
 
சீனாவில் சல்பர் டை ஆக்ஸைடின் அளவு 1350 மிலிகிராம் இருப்ப்பதகவும், இது இங்கிலாந்தில் 500 மிலி கிராம் இருப்பதாகவ் வும் கூறப்படுகிறது. ஆனால் சீனாவில் சல்பர் டை ஆக்ஸைடின் அளவு 1350 மிலிகிராம் உள்ளது என்பது ஆபத்தானது என்று எச்சரிக்கிண்றனர். அதனால் தான் இந்த நோயின் தாக்கத்தை குறித்து சீனா உண்மையான தகவலை மறைப்பதாகவும் தெரிகிறது.
 
கொரோனா வைரஸால் அதிக்கப்படியான மரணம் அடைந்ததாதால் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மனித உடல்களை எரித்துள்ளனர். அதில் இருந்து தான் சல்பர் டை ஆக்ஸைடு வூஹான் மாகாணத்தில் வான் மீது கவிந்துள்ளது என்று ஒரு தகவல் வெளியாகிறது.
 
தினமும் 242 பேர் இறப்பதாகவும், 242 பேர் பேர் தங்களுடையாம் மாகாணத்தை விட்டு வாழ்வை இழந்துவிட்டதாகவும்  அதிகாரப்பூர்வ செய்தித்தளமாக சிங்குவா தெரிவித்துள்ளது. 48, 206 பேர் மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாலும் கொரோனா வைரஸ் அதிக வேகத்தில் பரவி வருவதாலும் உலக சுகாதார அமைப்பு கடந்த திங்கட்கிழமை புரூஸ் எல்லார்ட் தலைமையில்  சினாவில் மருத்துவ சிகிச்சை அளிக்க சீனா வந்திறங்கியுள்ளனர். அவர்கள் தங்கள் பணிகளை செயல்படுத்தி கொரொனோ வைரஸை அழிக்கத்  தொடங்கிவிட்டனர்.
 
வியாழக்கிழமை மட்டும் 121 பேர் இறந்துள்ளனர். புதிதாக 5090 பெர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுகாதார  தெரிவித்துள்ளது. இதில், மொத்தம் 64,894 பேர் இதில் பாதிக்கப்பட்டுள்ளாது எனவும், 31 மாகாணங்களில் 121 பேர் கொரோனா வைரஸால் இறந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெற்று அறிவிப்புகள் கொண்ட பட்ஜெட்: டிடிவி தினகரன் விமர்சனம்!