Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்க ஜெயிச்சிட்டோம்.. ஆனா அமைதிப் பேச்சுவார்த்தைக்கும் ரெடி! - வித்தியாசமாக உருட்டும் பாகிஸ்தான் பிரதமர்!

Prasanth Karthick
செவ்வாய், 27 மே 2025 (09:09 IST)

இந்தியாவுடனான போரில் தாங்கள் வென்றுவிட்டதாக மார்த்தட்டிக் கொள்ளும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத நிலைகளை தாக்கியது. இதனால் இந்திய எல்லைகள் மீது பாகிஸ்தான் நடத்த முயன்ற தாக்குதல்களையும் இந்தியா முறியடித்தது, இந்த மோதலின் எதிரொலியாக சிந்துநதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்த நிலையில், பாகிஸ்தான் தனது வான் எல்லையை மூடியது.

 

இந்த போரில் இந்தியாவின் ரஃபேல் உள்ளிட்ட விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தொடர்ந்து பல இடங்களில் கூறி வருவதுடன், போரிலும் தாங்கள் வெற்றிப்பெற்றதாக கூறிக் கொண்டது.

 

துருக்கி ஈரான் நாடுகளுக்கு பயணம் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்தியாவுடனான அமைதி பேச்சுவார்த்தை குறித்து பேசியுள்ளார். ஈரான் அதிபருடனான சந்திப்புக்கு பிறகான செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் “காஷ்மீர் பிரச்சினை மற்றும் நதிநீர் பங்கீடு பிரச்சினை உட்பட அனைத்து பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புகிறோம். மேலும் வணிகம், பயங்கரவாத எதிர்ப்பு குறித்தும் அண்டை நாடுகளுடன் பேச நாங்கள் தயார்.

 

இந்த சமாதான முன்மொழிவை ஏற்றுக்கொண்டால் இந்தியா உண்மையிலேயே அமைதியை விரும்புகிறார்கள் என்பதை காட்டுவார்கள். இந்தியாவுடனான போரில் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம்” என்று பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர், இதில் எந்த குழப்பமும் இல்லை: அண்ணாமலை

கொல்கத்தா ஐஐடி மாணவி பாலியல் பலாத்கார விவகாரம்.. குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!

ஒரே பெண்ணை மணந்த இரு சகோதரர்கள்.. பாரம்பர்ய சடங்குடன் நடத்தி வைத்த பெரியோர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments