Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேசித் தீர்க்கலாம்னு சொல்லியும் கேட்கல! இந்தியாவிற்கு பதிலடி கொடுப்போம்! - பாகிஸ்தான் பிரதமர் ஆவேசம்!

Prasanth Karthick
வியாழன், 8 மே 2025 (11:39 IST)

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாமில் இந்தியா தாக்குதல் நடத்தியதற்கு, பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என அந்நாட்டு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் ஆவேசமாக பேசியுள்ளார்.

 

போர் குறித்து இஸ்லமாபாத்தில் நாடாளுமன்றத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு அவர் தொலைக்காட்சியில் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர் “பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி இந்தியா பெரிய தவறை செய்துவிட்டது. இந்த தாக்குதல் கோழைத்தனமானது. இதற்கு கண்டிப்பாக பதிலடி கொடுப்போம்.

 

பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை. ஆனால் இந்தியா தவறான காரணங்களுக்காக குற்றம் சாட்டியது. குற்றம் சாட்டுவதற்கு முன்பு விசாரணை நடத்த வேண்டும் என கூறியதையும் இந்தியா ஏற்க மறுத்தது.

 

பாகிஸ்தான் பின்வாங்கும் என அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் இங்கு பாதிக்கப்பட்டவர்களின் ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் நாங்கள் பழிவாங்குவோம் என உறுதியளிக்கிறேன். இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுத்தது. ஒரு மணி நேர வான்வழிப் போரில் எதிரிகளின் ஜெட் விமானங்களை தாக்கி அழித்தோம். உறுதியுடன் போராடி வரும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு, நம் மக்கள் ஒற்றுமையாக நிற்க வேண்டும்” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக என்ற பெயரை விட 'Drug mafia kazhagam' என்கிற பெயரே பொருத்தமாக இருக்கும்: பாஜக

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கு அருகதை இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமி

ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.. போருக்கு பின் வெளியே வந்த கமேனி..!

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments