Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 மணி நேரத்தில்... 250 நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு

Webdunia
வெள்ளி, 4 மே 2018 (15:34 IST)
அமெரிக்காவில் ஹவாய் தீவுகளில் 24 மணி நேரத்தில் தொடர்ந்து 250 நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து தற்போது எரிமலை வெடித்து அவசர அவசரமாக மக்கள் அந்த இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 
 
இரண்டு நாட்களுக்கு முன்னர் எரிமலை வெடிப்பு குறித்து எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்நிலையில், திடீரென எரிமலை வெடித்து சாலை வரை எரிமலை குழம்பு பீறிடத்துவங்கியுள்ளது. 
 
சாலைகளில் விரிசல் ஏற்பட துவங்கியுள்ள நிலையில், எந்நேரமும் எரிமலை குழம்பு வெளியேறலாம் என்ற காரணத்தால், மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 
 
பல இடங்களில் கரும்புகை சூழ்ந்து உள்ள நிலையில், நிலப்பரப்பை உடைத்து கொண்டு எரிமலை குழம்பு வெளியேறும் காட்சிகள் இணையத்தில் கசிந்து வருகிறது.  
 
அதோடு, வீடுகளைவிட்டு வெளியேற்றப்படும் மக்கள் தங்குவதற்கு அமெரிக்க செஞ்சிலுவை சங்கம் அவசர கால முகம் ஒன்றை அமைத்துள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9-ஐ கடந்ததால், எரிமலை வெடித்திருக்கும் என கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments