இந்தியாவுக்கு தேவையான உதவிகளை செய்ய தயார்! – அமெரிக்கா அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 25 ஏப்ரல் 2021 (11:14 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிற்கு தேவையான உதவிகளை செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ளன. இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் படுக்கை வசதி போதாமை, ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் மக்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவிற்கு இந்த அவசர காலக்கட்டத்தில் உதவி செய்ய தயாராக இருப்பதாக சீனா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன. இந்நிலையில் தற்போது அமெரிக்காவும் இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு துறை வெளியிட்டுள்ள செய்தியில் இந்திய மக்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு உதவ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

2027-ல் ககன்யான் திட்டம்.. அடுத்து இந்தியாவின் விண்வெளி மையம்! - இஸ்ரோ தலைவர் கொடுத்த தகவல்!

தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிக்க முடியாதா? 23 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.. புயலாக மாறுமா?

ரூ.1812க்கு ஒரு வருட வேலிடிட்டி.. தினம் 2 ஜிபி டேட்டா.. பி.எஸ்.என்.எல். அசத்தல் திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments