Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

10 நாட்களில் 48 ஆயிரம் பேர் ஆப்கனிலிருந்து மீட்பு! – அமெரிக்கா தகவல்!

Advertiesment
World
, செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (08:17 IST)
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில் 48 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் திரும்ப பெறப்பட்ட நிலையில் தலீபான்கள் நாட்டை கைப்பற்றியுள்ளனர். இதனால் ஆப்கன் நாட்டு மக்கள் பலரும், வெளிநாட்டினரும் ஆப்கானிஸ்தானை விட்டு வேகமாக வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்கா தனது விமானங்கள் மூலமாக அமெரிக்க மக்கள் மட்டுமல்லாது. ஆப்கன் மற்றும் பிற நாட்டு மக்களையும் மீட்டு வருகிறது. தற்போது அமெரிக்கா வெளியிட்டுள்ள தகவலில் கடந்த 14ம் தேதி முதல் 10 நாட்களுக்குள்ளாக மொத்தமாக 48 ஆயிரம் பேரை ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்டதாக தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேகதாது விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!