Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிரம்ப் வரி விதிப்பிற்கு அமெரிக்க நீதிமன்றம் தடை.. அதிகாரத்தை மீறியதாக அறிவிப்பு..

Advertiesment
டிரம்ப்

Siva

, வியாழன், 29 மே 2025 (17:54 IST)
அமெரிக்காவின் வணிக நீதிமன்றம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்டுவந்த வரிவிதிப்பு உத்தரவை ரத்து செய்துள்ளது. 
 
அமெரிக்க அரசு பல்வேறு நாடுகளின் பொருட்கள் மீது அதிக வரி விதிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்ததால், உலக சந்தைகள் பெரும் சீரழிவை சந்தித்தன.
 
இந்நிலையில், டிரம்ப் வரிவிதிப்பை அரசியலமைப்பிற்கு முரணானது எனக் கூறி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வெளிநாட்டு வர்த்தக ஒப்பந்தங்களை அமெரிக்க காங்கிரஸ்தான் நிர்ணயிக்கவேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
 
ஆனால் டிரம்ப், அவசரநிலை களஞ்சியச் சட்டத்தை பயன்படுத்தி வரிவிதிப்பு கொண்டு வந்ததாக கூறப்பட்டது. இது சட்டவிரோதமானது எனக் கூறி, அவருடைய உத்தரவை நீதிமன்றம் செல்லாது என அறிவித்தது.
 
மேலும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் சூழ்நிலையை தடுத்து நிறுத்தியது தனது வரிவிதிப்பினால்தான் என டிரம்ப் தரப்பு தொடர்ந்து வாதாடியது. ஆனால் இந்தியா இதனை முற்றிலும் மறுத்த நிலையில், தற்போது அமெரிக்க அரசு தரப்பும் இதே கருத்தை நீதிமன்றத்தில் வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த வாதத்தையும் நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.
 
இந்த தீர்ப்பு அமெரிக்கா மற்றும் ஆசிய சந்தைகளில் ஏற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரையை கடந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!