Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உக்ரைன் பகுதிகளை இணைக்கும் ரஷ்யா.. அமெரிக்கா கடும் கண்டனம்!

உக்ரைன் பகுதிகளை இணைக்கும் ரஷ்யா.. அமெரிக்கா கடும் கண்டனம்!
, வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (11:57 IST)
உக்ரைனில் ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை இன்று ரஷ்யா தனது நாட்டுடன் இணைக்கிறது.

உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி 6 மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையிம் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து நடந்து வரும் போரால் இரு தரப்பு ராணுவ வீரர்களும் உயிரிழந்து வருவதுடன், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

6 மாத காலத்திற்கும் மேலாக போர் நடத்தி வரும் நிலையில் உக்ரைனின் பல்வேறு பிராந்தியங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் உக்ரைனிடம் ரஷ்யா கைப்பற்றிய பகுதிகளான லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய பிராந்தியங்களை இன்று அதிகாரப்பூர்வமாக ரஷ்யாவுடன் இணைக்க இன்று கையெழுத்திடப்படுகிறது.

இதற்கு அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து பேசியுள்ள அமெரிக்க உள்துறை செயலாளர் ஆண்டனி ப்ளிங்டன், சர்வதேச விதிகளின்படி ரஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையானது சட்ட விரோதமானது. உக்ரைனிடமிருந்து ஆக்கிரமித்த 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்துக் கொள்வதை அமெரிக்கா ஒருபோதும் அங்கீகரிக்காது” என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லேப்டாப் ஆர்டர் செய்தவருக்கு சோப் டெலிவரி: ப்ளிப்கார்ட் தில்லாலங்கடி!