Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா ஆபத்து; 10 கோடி பேர் தீவிர வறுமைக்கு செல்லும் அபாயம்! – ஐநா எச்சரிக்கை!

Webdunia
ஞாயிறு, 19 ஜூலை 2020 (15:47 IST)
இரண்டாம் உலக போருக்கு பின்னர் உலகளவில் பெரும் பொருளாதார ஏற்றத்தாழ்வு கொரோனாவால் உருவாகியுள்ளதாக ஐநா பொதுசெயலாளர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கி கிட்டத்தட்ட 8 மாத காலமாக உலகம் முழுவதையும் முடக்கியுள்ள கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 6 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். பல கோடி மக்கள் கொரோனா பாதிப்பில் இருந்து வருகின்றனர். இதனால் உலக நாடுகள் அனைத்தும் பெரும் பொருளாதார சரிவை சந்தித்து வருகின்றன.

இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் குறித்து பேசியுள்ள ஐநா சபை பொதுசெயலாளர் அந்தோணியோ குட்ரெஸ் “கண்ணுக்கு தெரியாத ஒரு வைரஸிடம் உலகம் மண்டியிட்டுள்ளது. இந்த தொற்று நோய் நமது பலவீனத்தை வெளிக்காட்டியுள்ளது. இந்த தொற்று நோயால் முறைசாரா அமைப்பு தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் என பலரும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். வல்லரசு நாடுகளை விடவும், வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளன. இதனால் உலகம் முழுவதும் சுமார் 10 கோடி மக்கள் தீவிரமான வறுமைக்கு செல்லும் அபாயம் உள்ளது” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments