Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே நாளில் 38 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா பாதிப்புகள்! – இந்திய நிலவரம்!

ஒரே நாளில் 38 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா பாதிப்புகள்! – இந்திய நிலவரம்!
, ஞாயிறு, 19 ஜூலை 2020 (09:46 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் 10 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் ஒரே நாளில் 38 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் 10 லட்சம் பாதிப்புகளை தாண்டி இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் 38,901 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 10,77,918 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 26,816 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 6,77,423 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3,00,937 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,596 பேர் பலியான நிலையில் 1,65,663 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் 1,65,714 ஆக உள்ள நிலையில் 2,403 பேர் பலியாகியுள்ளனர். 1,13,856 பேர் குணமடைந்துள்ளனர். இதுதவிர பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மத்திய அரசின் அறிவிப்பின்படி பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலங்களின் பட்டியல்.

டெல்லி – 1,21,582
கர்நாடகா – 59,652
குஜராத் – 47,390
உத்தர பிரதேசம் – 47,036
தெலுங்கானா – 43,780
மேற்கு வங்கம் – 40,209
ராஜஸ்தான் – 28,500
ஹரியானா – 25,547
மத்திய பிரதேசம் – 21,763

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிருஷ்ணகிரி எம்எல்ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று உறுதி