சமீபத்தில், உக்ரைன் நாடு ரஷ்யா மீது அதிரடியான தாக்குதல் நடத்திய நிலையில், அந்த தாக்குதலுக்கு புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார் என்றும், எனவே போர் நிற்க வாய்ப்பே இல்லை என்றும் டிரம்ப் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, கண்டெய்னர் மூலம் ட்ரோன்களை கொண்டு சென்ற உக்ரைன், ரஷ்யாவின் விமான தளத்தின் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், ரஷ்யாவின் 41 போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், குண்டுமழை பொழிந்த ரஷ்யாவின் விமானங்களும் அழிக்கப்பட்டு விட்டன.
இந்த நிலையில், படுமோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் ரஷ்யா பழிக்கு பழி வாங்க உக்ரைன் மீது ஒரு பெரிய தாக்குதல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசி அமெரிக்க அதிபர் டிரம்ப், புதினிடம் 75 நிமிடங்கள் பேசினேன்.உக்ரைன் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் கொடுக்க அவர் தயாராக இருக்கிறார். எனவே, இப்போதைக்கு இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்பு இல்லை" என்று தெரிகிறது என்று கூறினார்.