Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போரில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க புதிய செயலி.. உக்ரைன் அரசு அறிமுகம்..!

Webdunia
சனி, 8 ஏப்ரல் 2023 (14:31 IST)
போரில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிப்பதற்காக உக்ரைன் நாட்டு அரசு புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
 
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது என்பதும் இதில் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர் என்பது தெரிந்ததே. மேலும் போரில் பல குழந்தைகள் காணாமல் போயிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் போரில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடித்து அவர்களை பெற்றோரிடம் ஒப்படைப்பதற்காக ரீயூனைட் உக்ரைன் என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. 
 
போரில் பிரிந்த குழந்தைகளின் தகவல்கள் இந்த செயலியில் பதிவு செய்யப்படும் நிலையில் அந்த குழந்தையை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவியாக இருக்கும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் போரில் காணாமல் போன குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments