Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏலியன்களுடன் தொடர்புகொள்ள வேண்டுமா?? துருக்கி தரும் புது ஐடியா!!

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2017 (17:54 IST)
எதிர்காலத்தில் ஏலியன்களுடன் தொடர்பு கொள்ளவும், ஏலியன்களிடம் பேசுவதற்காகவும் புதிய படிப்பை துருக்கியில் இருக்கும் பல்கலைக்கழகம் ஒன்று அறிமுகப்படுத்தி இருக்கிறது. 
 
துருக்கியில் இருக்கும் அக்டேனிஸ் பல்கலைக்கழகம் யுஃபாலாஜி மற்றும் எக்ஸ்பாலிடிக்ஸ் என இதற்கு தலைப்பு வைத்துள்ளது. இந்த படிப்பு ஏலியன்களிடம் பேசுவதற்காக படிப்பு என்று கூறப்படுகிறது. 
 
இதன் மூலம் எதிர்காலத்தில் ஏலியன்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. இந்த படிப்பில் உலகில் இருக்கும் முக்கியமான மொழிகள் குறித்த தகவல்கள் பாடமாக நடத்தப்படும். மொழி தெரியாத, மொழி இல்லாத மக்களிடம் பேசுவது எப்படி என்றும் கற்றுத்தரப்படுமாம். 
 
மேலும் ஏலியன்களின் மொழியை புரிந்து கொள்வதற்கும் இது உதவுமாம். இன்னும் 10-ல் இருந்து 15 வருடத்திற்குள் இந்த படிப்புக்கு நிறைய எதிர்ப்பார்ப்பு உருவாகும் என்றும் கூறப்படுகிறது. 
 
தற்போது இந்த படிப்பில் சேர்வதற்கு நிறைய மாணவர்கள் ஆர்வம் காட்டியுள்ளனராம். இந்த படிப்பை குறித்த தேடலின் மூலம் இது தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments