Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5பேரை கொன்ற சிறுத்தையை வேட்டையாட துப்பாக்கியுடன் காட்டுக்குள் புகுந்த மந்திரி

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2017 (16:59 IST)
மகாராஷ்டிரா மாநில பாஜக அமைச்சர் 5 பேரை கொன்ற சிறுத்தையை வேட்டையாட துப்பாக்கியுடன் காட்டுக்குள் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
மகாராஷ்டிரா மாநிலம் பாஜக அமைச்சர் கிரிஷ் மஹாஜன் சிறுத்தையை வேட்டையாட துப்பாக்கியுடன் காட்டுக்குள் செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி உள்ளது. ஜலகான் மாவட்டம், சலிஸ்கான் பகுதியில் சிறுத்தை புலியின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. காட்டைவிட்டு ஊருக்குள் புகுந்த ஒரு சிறுத்தை கடந்த ஒன்றரை மாதத்தில் 5 பேரை கொன்றுள்ளது.
 
இந்த சிறுத்தையை பிடிக்க சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த மாவட்டத்தின் வழியாக அமைச்சர் கிரிஷ் சென்றபோது சிறுத்தை நடமாட்டம் தெரிந்துள்ளது. சிறுத்தையை கண்ட அமைச்சர் உடனடியாக காரை விட்டு இறங்கி துப்பாக்கியுடன் சென்றுள்ளார்.
 
அமைச்சர் துப்பாக்கியுடன் சிறுத்தையை வேட்டையாட சென்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

மாமியாருடன் குடும்பம் நடத்தும் மருமகன்.. காவல்துறையில் மாமனார் அளித்த புகார்.

திருடர்கள் என்ற பழியை தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் சுமத்தலாமா.? முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம்..!!

நான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல்காந்தி: செல்லூர் ராஜு

கோயம்பேட்டில் பசுமைப் பூங்கா அமைக்க வேண்டும்..! முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்.!!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவு எதிரொலி.. அதிபர் தேர்தல் நடத்த திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments