Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐஸ்வர்யா ராய் படப்பிடிப்பின்போது கார் மோதி விபத்து

ஐஸ்வர்யா ராய் படப்பிடிப்பின்போது கார் மோதி விபத்து
, செவ்வாய், 7 நவம்பர் 2017 (12:37 IST)
இந்திய நடிகையான ஐஸ்வர்யா ராய் தற்போது நடித்துவரும் பன்னேய் கான் என்ற படத்தின் ஷூட்டிங்கின்போது ஏற்பட்ட விபத்தில் பெண் உதவிய் இயக்குநர் படுக்காய்ம் அடைந்துள்ளார். 

 
மும்பையில் நடந்து வரும் படப்படிப்பில், அனில் கபூர், ராஜ்குமார் ராவ் உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தை புதுமுகம் அப்துல்  மஞ்சுரேக்கர் இயக்குகிறார். ஹாலிவுட் படமான ‘எவரியடிஸ் பேமஸ்’ ரீமேக்கான இந்த படத்தில் ஐஸ்வர்யா ஒரு கால்  டாக்சியை பொது இடத்தில் நின்று கூப்பிடுவது போல ஒரு காட்சி புளோரா பவுண்டேசன் என்னும் இடத்தில் எடுக்கப்பட்டது.  தொலைவில் இருந்து இக்காட்சியை எடுத்து கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று பெண் உதவி இயக்குநர்  மீது மோதியது. இதனால் உடனே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர்  நலமாக உள்ளதாக கூறப்படுகிறது.
 
விபத்து குறித்து படக்குழு கூறுகையில், அந்த உதவி இயக்குனர் காதில் ஹெட் செட் போட்டிருந்ததால் வண்டி வேகமாக வந்த  சத்தம் எதுவும் கேட்கவில்லையாம். இதனால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல்ஹாசனுக்கு நேற்று எதிர்ப்பு.. இன்று வாழ்த்து - காயத்ரி ரகுராம் இரட்டை வேடம்?