Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரதமர் மோடியை போய் மீடியாக்கிட்ட சொல்ல சொன்னேன்! – சைடு கேப்பில் திட்டிய ட்ரம்ப்!

பிரதமர் மோடியை போய் மீடியாக்கிட்ட சொல்ல சொன்னேன்! – சைடு கேப்பில் திட்டிய ட்ரம்ப்!
, செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (12:35 IST)
அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கொரோனா தடுப்பு குறித்து பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து ட்ரம்ப் பேசியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பரில் நடக்க உள்ள நிலையில் குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் அமெரிக்க மாகாணங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவ்வாறாக நெவேடா மாகாணத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ட்ரம்ப் “உலகிலேயே கொரோனா பரிசோதானைகள் அதிகம் செய்த நாடு அமெரிக்காதான். இதுவரை 4 கோடியே 40 லட்சம் மாதிரிகளை பரிசோதனை செய்துள்ளோம். 150 கோடி மக்கள் வாழும் இந்தியாவே கொரோனா பரிசோதனையில் அமெரிக்காவுக்கு அடுத்ததாகதான் உள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும் “கொரோனா செயல்பாடுகள் குறித்து பிரதமர் மோடியிடம் பேசிய போது அவர்கூட நீங்கள் சிறப்பாக செயல்படுகிறீர்கள் என்று என்னை பாராட்டினார். அதற்கு நான், இதை போய் இந்த நேர்மையற்ற ஊடகங்களிடம் சொல்லுங்கள் என கூறினேன்” என்று பேசியுள்ளார்.

பிரதமர் மோடி தன்னை புகழ்ந்ததாக கூறிய ட்ரம்ப் அதே போக்கில் அமெரிக்க ஊடகங்கள் தன்னை தொடர்ந்து விமர்சிப்பது குறித்தும் காட்டமாக பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சட்டப்பேரவையில் நீட் பிரச்சினையால் சர்ச்சை! – காங்கிரஸ் வெளியேற்றம்!