Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வடகொரிய அதிபரின் முடிவை பாராட்டிய அமெரிக்க அதிபர்!!

வடகொரிய அதிபரின் முடிவை பாராட்டிய அமெரிக்க அதிபர்!!
, வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (15:25 IST)
அமெரிக்காவை மிரட்டும் வகையில் வடகொரியா ஏவுகணை மற்றும் அணுகுண்டு சோதனைகளை உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி நடத்திவருகிறது. 


 
 
இதனால் வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. சமீபத்தில் வடகொரியா, அமெரிக்காவின் குவாம் தீவு மீது தாக்குதல் நடந்த போவதாக அறிவித்தது.
 
இதனால் அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியாவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில், குவாம் தீவை தாக்குதலை கைவிடுவதாக வடகொரிய அதிபர் கிம் தெரிவித்துள்ளார்.
 
இதற்கு டிரம்ப், இது ஒரு நியாயமான முடிவு. இந்த மாற்றத்தை வரவேற்கிறேன். வடகொரியா அதிபர் புத்திசாலித்தனமான முடிவை எடுத்திருக்கிறார் என பாராட்டியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4 வயது தங்கையை பலமுறை கற்பழித்த அண்ணன்!