Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதானி மீதான அமெரிக்க நீதிமன்றத்தின் வழக்கு தடைபடுமா? டிரம்ப் முக்கிய அறிவிப்பு..!

Mahendran
செவ்வாய், 11 பிப்ரவரி 2025 (16:59 IST)
வெளிநாடுகளில் நடக்கும் லஞ்சம் முறைகேடுகளை தடுக்கும் சட்டத்தின் அமலாக்கத்தை நிறுத்தி வைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று கையெழுத்திட்டுள்ளார். இதையடுத்து, தொழிலதிபர் அதானி உள்பட வெளிநாட்டு தொழிலதிபர்கள் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணை பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

வெளிநாட்டில் லஞ்சம் முறைகேடுகளை தடுக்கும் இந்த சட்டத்தின் மூலம், அமெரிக்க நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்கும் நிறுவனங்கள் மீது ஊழல் விவகாரங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்ய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ், இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து, அதானி அமெரிக்க நிறுவனங்களிடம் நிதி பெற்றதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால் சமீபத்தில் அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், இந்த சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக, அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெறும் அதானி வழக்கு தடைபடும் அல்லது ரத்து செய்யப்படும் என கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி UPI பரிவர்த்தனைகள் வேகமாக நடக்கும்! புதிய விதிகள் இன்று முதல் அமல்!

8 மாவட்டங்களில் இன்று காலை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

டெஹ்ரானில் இருந்து அனைவரும் வெளியேறுங்கள்: இஸ்ரேலை அடுத்து டிரம்பும் எச்சரிக்கை..!

டெல்லி குறித்து தமிழக இளைஞரின் பார்வை.. வைரலாகும் சமூக வலைத்தள பதிவு..

ஈரான் அரசு டிவி நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல்.. செய்தி வாசித்த பெண் அலறியடித்து ஓட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments